முகூர்த்த ஏர் கட்டுதல் –காராள கவுண்டர் ( மலையாளிகள)்
முதல் வருட அறுவடையை முடிந்து அடுத்த வருடத்திற்கான விதைப்பிற்காக நிலத்தை உழுவதற்கும்
கொத்துவதற்கும் முன்பாக முகூர்த்த ஏர் கட்டுதல் என்ற சடங்கைச் செய்து முடிக்கிறார்கள்.
புதிய உழவுக்கும் புதிய விதைப்பிற்கும் சரியான தருணம் எதுவென்று முடிவெடுத்துக் காட்டிலோ
வயலிலோ முதன்முதலாக உழவு ஏர் கட்டப்படுகின்றது. இதனையே முகூர்த்த ஏர் என்கிறார்கள்.
இந்த ஏரை ஊர் பூசாரி கட்டுகிறார். பரம்பரை பரம்பரையாக ஊர் பூசாரிதான் முகூர்த்த ஏரைக்
கட்டுகிறார். முகூர்த்த ஏரை கட்டுவதற்குரிய செய்தியை முதல் நாள் தண்டோரா மூலமாக ஊராருக்கு
அறிவிப்பார்கள். முகூர்த்த ஏர் கட்டுகின்ற நாளன்று வீட்டில் அடுப்பு எரிக்க மாட்டார்கள்.
பயறு வேக வைக்க மாட்டார்கள். குளிக்கவோ துணிதுவைக்கவோ கூடாது. வேலை செய்யக் கூடாது.
காடு அழிச்சு நெருப்பு மூட்டக் கூடாது. இந்த நடைமுறைகளைக் கடைபிடிக்காதவர்கள் சம்பிரதாயத்தை
மீறிய குற்றத்திற்காகப் பஞ்சாயத்தார் முன்னிலையில் குற்றம் சுமத்தப்பட்டு தண்டனையை
ஏற்கிறார்கள்.

No comments:
Post a Comment